இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் 'பிக் பி' எனப்படும் அமிதாப் பச்சன், இப்போதும் சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். அதேப்போல் அவரது மருமகளான ஐஸ்வர்யா ராயும் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார். இதில் அமிதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'டிஇ3என்' படமும், ஐஸ்வர்யா நடித்துள்ள 'சரப்ஜித்' படமும் வருகிற மே 19ம் தேதி ரிலீஸாக இருந்தது. இதனால் மாமனாரும், மருமகளும் நேரடியாக மோதும் சூழல் உருவானது. இந்நிலையில் அமிதாப் பச்சனின், 'டிஇ3என்' படத்தின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது.
இதுப்பற்றி விசாரித்ததில், ஐஸ்வர்யா ராய், சரப்ஜித் படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பதால், இந்தப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறாராம். அதன்காரணமாக தனது மருமகளுக்காக தன்னுடைய படமான 'டிஇ3என்' படத்தை தள்ளி வைக்க சொல்லி இயக்குநர் ரிபு தாஸ் குப்தா மற்றும் தயாரிப்பாளர் சுஜாய் கோஷிடம் அமிதாப் கேட்டதாகவும், அதற்கு இருவரும் சம்மதம் சொல்ல, அதனால் அமிதாப்பின் 'டிஇ3என்' படம் தள்ளிப்போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக மருமகள் ஐஸ்வர்யாராய்க்காக விட்டு கொடுத்துள்ளார் மாமனார் அமிதாப்பச்சன்.