டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வழக்கமாக சித்திரை விஷு என்றால் மலையாள திரையுலகம் முன்னணி நடிகர்களின் படங்களால் களைகட்டுவதுதான் வாடிக்கை.. ஆனால் இந்தமுறை சித்திரை விஷு கொண்டாட்டமாக கடந்த மூன்று வாரங்களில் மலையாள படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசானாலும் கூட முக்கிய நாளான நேற்று மலையாளத்தில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் தான்.. விஜய்யின் 'தெறி' படம் கேரளாவில் பிரமாண்டமான முறையில் ரிலீஸ் செய்யப்பட்டது தான் இதற்கு முக்கிய காரணம்.
இருந்தாலும் பொன் வைக்கின்ற இடத்தில் பூ வைப்பது போல மலையாள முன்னணி நடிகர்கள் தங்களது அடுத்து வரவிருக்கிற படங்களின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை ஓரளவு குஷிப்படுத்தினார்கள்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மோகன்லாலின் 'புலி முருகன்', மம்முட்டி நடிப்பில் அடுத்து விரைவில் வெளியாக இருக்கும் 'ஒயிட்', துல்கரின் 'கமிட்டி பாடம்' மற்றும் ஜெயசூர்யாவின் 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' ஆகிய நான்கு படங்களின் போஸ்டர்கள் நேற்று வெளியாகின.