ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கதாநாயகன் என்றால் அட்லிஸ்ட் இந்த அளவுக்கு பர்சனாலிட்டியாக இருக்க வேண்டும் என்கிற கருத்துக்களை உடைத்தெறிந்து விட்டு, ஒல்லிக்குச்சியான நடிகராலும் உசரத்துக்கு போக முடியும் என்பதை நிரூபித்தவர்தான் தனுஷ். எந்தவொரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் திறமையான நடிகர் அவர். அவரது நடிப்பைப் பார்த்து விட்டு, விஜய் உள்ளிட்ட சமகாலத்து நடிகர்களே தனுஷை திறமையான நடிகர் என்று மேடைகளிலேயே கூறி வருகிறார்கள். அதோடு, வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்துக்காக இந்திய அரசின் தேசிய விருதினையும் பெற்றார் தனுஷ்.
இந்நிலையில், கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஒரு தொலைக்காட்சியில் டைரக்டர் கெளதம்மேனனுடன் தனுஷ் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்றபோது உங்களது மனநிலை எப்படியிருந்தது? என்று கெளதம்மேனன் தனுஷிடம் கேட்டார். அதற்கு, தேசிய விருது பெரிய அங்கீகாரம். அது கிடைத்தது பெரிய மகிழ்ச்சிதான். என்றாலும் அந்த விருது 2011-ல் எனக்கு கிடைத்தபோது, ரஜினி சார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் தேசிய விருது மகிழ்ச்சியை அப்போது என்னால் கொண்டாட முடியவில்லை என்றார்.