தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆசாமி, இன்னார்க்கு இன்னாரென்று ஆகிய படங்களை இயக்கியவர் ஆண்டாள் ரமேஷ். தற்போது திருநங்கைகள் சம்பந்தப்பட்ட கதையில், நங்கை மகன் -என்றொரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதாவது மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படும் திருநங்கைகளும் எல்லோரையும் போலவே திறமையானவர்கள். அதனால் அவர்களை ஓரங்கட்டக்கூடாது. ஆதரிக்க வேண்டும் என்கிற கருத்தை மையமாகக்கொண்டு நங்கை மகன் என்ற படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தில் நடிக்க ஜீவா உள்ளிட்ட சில நடிகர்களிடம் கால்சீட் கேட்டு வருவதாகவும் கூறுகிறார்.
மேலும், திருநங்கைகள் நாட்டை ஆளும் தகுதி இல்லாதவர்கள் என்று குஷ்பு சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர், எனது படத்தில் திருநங்கைகள் அரசியலில் நுழைந்து ஆட்சி பொறுப்புக்கு வருவது போன்றுதான் கதை உள்ளது. குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை படமாக்கவில்லை. திருநங்கைகளும் அறிவாளிகளே, அவர்களுக்கும் ஆண், பெண்ணைப்போன்று எல்லாவித திறமைகளும் உள்ளது என்பதை சொல்லவே இந்த நங்கை மகன் படத்தை எடுக்கிறேன் என்கிறார் ஆண்டாள் ரமேஷ்.