'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை(ஏப்., 17ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் மோதுகின்றன. குறிப்பாக, நடிகர்கள் மட்டுமின்றி சில முன்னணி நடிகைகளும் இந்த போட்டியில் கலந்து கொள்வது புதுமை. இந்த போட்டியை ரஜினி-கமல் இருவரும் முன்னின்று துவக்கி வைக்கிறார்கள்.
முன்னதாக இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் சில நாட்களாக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ரியல் வீராங்கனைகள் போலவே அனைவருமே களத்தில் இறங்கி விளையாடப்போகிறார்களாம். மேலும், காலை 10 மணிக்கு இந்த போட்டி தொடங்கயிருப்பதால் மைதானத்திற்குள் 9 மணிக்குள் அனைவரும் ஆஜராகி விடுகிறார்களாம்.
சரியாக காலை 10 மணிக்கு கமல்-ரஜினி இருவரும் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்கள். பின்னர் மாலை 7 மணிக்கு போட்டிகள் முடிவடைந்ததும், மக்கள் முன்னிலையில், சமீபத்தில் பத்மவிபூஷண் விருது பெற்ற ரஜினிக்கு பாராட்டு விழாவும் நடக்க இருக்கிறது.