சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஷால் நடித்த 'திமிரு' படத்தில் அதிரடி வில்லியாக நடித்து வில்லி நடிகைகளையெல்லாம் அதிர வைத்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதோடு வில்லியாக நடித்துக் கொண்டிருந்த சில நடிகைகள் ஸ்ரேயா ரெட்டிக்கு முன்னால் நாமெல்லாம் நிற்கவே முடியாது என்று பதறிப்போனார்கள். அப்படியொரு ஆவேசமான வில்லியாக அப்படத்தில் விஷாலை மிரட்டினார் அவர். அதையடுத்து, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் என சில படங்களில் நடித்த ஸ்ரேயா ரெட்டி, திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருந்தார் என்றாலும், விஷால் நடித்த தோரணை, வெடி ஆகிய படங்களை தயாரித்தார்.
இந்த நிலையில், தற்போது அண்டாவக்காணோம், சில சமயங்களில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அண்டாவக்காணோம் படத்தில் கதாநாயகிக்கு இணையான ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரேய ரெட்டி, மிக இயல்பாக மாறி நடித்துள்ளாராம். அதேபோல் பிரியதர்ஷன் இயக்கத்தில் சில சமயங்களில் படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா ரெட்டிக்கு இந்த படத்திலும் அழுத்தமான கதாபாத்திரம்தானாம். அதோடு அவருக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாம். அந்த அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறி தத்ரூபமாக நடித்திருக்கிறாராம்.
அதோடு, இதையடுத்து சில புதிய பட வாய்ப்புகள் ஸ்ரேயா ரெட்டியை தேடி செல்கின்றனவாம். இதனால் மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி.