டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உலகம் முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தெறி' படம் செங்கல்பட்டு வினியோக ஏரியா ரசிகர்களுக்கு மட்டும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அம்பத்தூர், திருவள்ளூர் உட்பட செங்கல்பட்டு வினியோகப் பகுதியில் சுமார் 60 தியேட்டர்களில் திரையிடப்படாமல் போனது. இதனால் சுமார் இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வருவாய் இழப்பு முதல் நாளில் மட்டும் ஏற்பட்டது என்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பிற ஏரியாக்கள், கேரளா, கர்நாடகா, உலகின் மற்ற பகுதிகள் என படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள். வசூல் ரீதியாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு படத்திற்கான வரவேற்பில் குறை இருக்காது என்கிறார்கள். அதே சமயம் விமர்சன ரீதியாக படத்திற்கு எதிராக சில கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. படத்தின் தரத்தில் 'ஜில்லா, புலி' படங்களை விட அதிகமாகவும், ‛துப்பாக்கி' படத்தை விட குறைவாகவும் உள்ளதாகவே விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், படம் பார்த்துவிட்டு வெளிவருபவர்கள் ஏமாற்றமில்லாமல் வருவதாகவே திரையரங்க வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. படத்தின் டைட்டிலை 'தெறி' என பவர்ஃபுல்லாக வைத்து விட்டு ஆக்ஷனில் அதிக கவனம் செலுத்தாமல் சென்டிமென்ட்டில் நனைய வைத்திருக்கிறார் என்ற பொதுவான கருத்தும் எழுகிறது.
உலகம் முழுவதும் முதல் நாள் வசூலாக சுமார் 12 கோடி ரூபாய் வரை இந்தப் படம் வசூலித்திருக்கலாம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வார இறுதிக்குள் 50 கோடி ரூபாயைக் கடக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.