'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுந்தர்.சியின் சொந்தப்பட நிறவனத்தின் பெயர் அவ்னி சினி மேக்ஸ். இந்த பேனரில்தான் 2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தைத் தயாரித்தார். ரெண்டு படம் தொடங்கி கலகலப்பு வரை அவ்னி சினி மேக்ஸ் பேனரில் பல படங்களைத் தயாரித்தார் சுந்தர்.சி. இவருடைய நிறுவனம் என்றாலும் அவ்னி சினி மேகஸ் குஷ்பூ பெயரிலேயே இருந்தது. தற்போது அவர் அரசியலில் பிசியாகிவிட்டதால், அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு, அவ்னி மூவிஸ் என்ற பெயரில் புதிய படநிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் இயக்குனர் சுத்தர்.சி.
இந்த நிறுவனத்தின் அதிபர் குஷ்பூ அல்ல. சுந்தர்.சி மட்டும்தான். அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தைத் தயாரித்தார் சுந்தர்.சி. அந்தப்படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. அவ்னி மூவிஸ் சார்பில் அடுத்ததாக முத்துன கத்திரிக்காய் என்ற படத்தை தயாரிக்கிறார் சுந்தர்.சி. தன்னுடைய உதவியாளர் வெங்கட் ராகவனை இப்படம் மூலம் இயக்குனராக களமிறங்க வைக்கிறார்.
40 வயதை நெருங்கியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும், முழு நேர அரசியல்வாதியான முத்துப்பாண்டிக்கு, இளம்பெண் மாயாவை பார்த்ததும் காதல் வருகிறது. இதன் பின், அரசியல் காதல் இரண்டிலும் முத்துப்பாண்டி சந்திக்கும், சுவாரஸ்யமான பிரச்சனைகளும், சம்பவங்களும் அதில் அவர் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்களுமே “முத்துன கத்திரிக்காய்” படத்தின் கதையாம். திருநெல்வேலி, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.