பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் நடிப்பில் நாளை வெளியாகயிருக்கும் படம் தெறி. விஜய்யின் முந்தைய படமான புலி ஏமாற்றி விட்டதால் இந்த படத்தில் போலீஸ் கெட்டப்பில் செம கெத்து காட்டியிருப்பார் என்று விஜய் ரசிகர்கள் தெறியை வரவேற்க பேனர், கட்அவுட் என்று பரபரப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், சென்னை உள்பட அனைத்து முக்கிய மாவட்டங்களில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் போலீஸ் கெத்தில் விஜய் நிற்கும் கட்அவுட்களை வைக்கும் பணிகளில் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் ஈடுபட்டிருக்கிறது.
குறிப்பாக, நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் 140 அடி உயரத்தில் விஜய் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளதாம். இதுதான் தமிழகத்திலேயே தெறி விஜய்யின் உயரமான கட்அவுட்டாம். இந்த கட்அவுட்டை போட்டோ எடுத்து நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் உலவ விட்டுள்ளார்கள். மேலும், விஜய்யின் ஒவ்வொரு படங்களும் ரிலீசாகும் அன்று, தாரைத்தப்பட்டை, வான வேடிக்கை முழுக்கத்துடன் பாலாபிஷேகம் செய்து வந்த ரசிகர்கள் தெறி விஜய் கட்அவுட்டுக்கும் பாலாபிஷேகம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஆனால், ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த விவகாரம் பெங்களூரில் நீதிமன்றத்தில் வழக்காகி விட்டதால், பாலாபிஷேக கொண்டாட்டமெல்லாம் வேண்டாம். அடக்கிவாசியுங்கள் என்றும் விஜய்தரப்பில் இருந்து ரசிகர் மன்றத்துக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டுள்ளதாம். ஆனபோதும் ஆர்வக்கோளாறு ரசிகர்கள் பாலாபிஷேக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு தயாராகிக்கொண்டிருப்பதாகவும் விஜய் தரப்புக்கு செய்திகள் வந்தவண்ணம் உள்ளதாம். அதனால் அந்த மாதிரி ரசிகர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக முக்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகளை முடுக்கி விட்டிருக்கிறார்களாம்.