‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாபா படத்தை தயாரித்து கதை எழுதி நடித்தார் ரஜினிகாந்த். சுரேஷ்கிருஷ்ணா அந்த படத்தை இயக்கியிருந்தார். 2002ல் அப்படம் வெளியான அப்படத்தை அதிக விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கினர். ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதனால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை அழைத்து நஷ்டஈடு வழங்கினார் ரஜினி. விளைவு, அதற்கடுத்து ரஜினி சிறிய ரோலில் நடித்த குசேலன் படம் ஓடாதபோதும் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டனர். ஆனால் கொடுக்கப்படவில்லை. அதையடுத்து லிங்கா படம் தோல்வியடைந்தபோதும் நஷ்டஈடு கேட்டு கொடி பிடித்தனர். அதற்கான பிரச்சினை இப்போதுவரை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அதற்கடுத்து தற்போது ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை வெளியிடும்போது அந்த பிரச்சினையை கையிலெடுத்து லிங்கா நஷ்டஈட்டை கொடுத்தால்தான் கபாலியை வாங்குவோம் என்று பல ஏரியாக்களில் விநியோகஸ்தர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் கபாலி படத்தை தயாரித்துள்ள எஸ்.தாணுவோ, கபாலி படத்தை சென்னை ஏரியா தவிர மற்ற ஏரியாக்களை யாரிடமும் கொடுக்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதாவது தமிழகம் முழுவதும் அவரே வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் தானே சந்திக்கலாம் என்று அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.