தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மைனாவைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. யானையை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். அதோடு, கும்கி, கொம்பன் யானைகளுக்கிடையே கடும் சண்டை ஏற்பட்டு இறுதியில் கொம்பன் யானையை கும்கி யானை கொல்லுவதும், அதையடுத்து அந்த கும்கி யானை இறந்து விடுவது போலவும் அந்த படத்தின் க்ளைமாக்ஸை முடித்திருந்தார் பிரபுசாலமன்.
இந்நிலையில், தற்போது தனுஷ் நடித்துள்ள 'தொடரி' படத்தை முழுக்க முழுக்க ரயிலுக்குள் படமாக்கியிருக்கும் அவர், அப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதோடு, தனது அடுத்த படம் கும்கி-2 என்று ஏற்கனவே கூறிவந்த பிரபுசாலமன், அந்த படத்தின் படப்பிடிப்பை தொடரி ரிலீசானதும் தொடங்குகிறாராம். மேலும், கும்கி படத்தில், யானைகள் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படத்தில் வைப்பதற்கு விலங்குகள் நல வாரியம் தடை போட்டதால் கஷ்டப்பட்டு எடுத்த பல காட்சிகளை நீக்கினார் பிரபுசாலமன்.
அதன்காரணமாக, காட்டுப்பகுதியில் விலங்குகளை வைத்து படமாக்கும் காட்சிகளை இந்த முறை தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துகிறாராம். அப்படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் தயாராகிறது. வெளிநாட்டு காடுகளில் இயற்கை அழகு மட்டுமன்றி, அங்கு விலங்குகளை வைத்து படமெடுக்க எந்த தடையும் இல்லை என்பதால் கும்கி-2 இரண்டாம் பாகத்தை இன்னும் வித்தியாசமான கோணத்தில் படம்பிடிக்கிறாராம் பிரபுசாலமன்.