பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தொடர் தோல்விகளை சந்தித்த செல்வராகவன் அதிலிருந்து மீண்டு வர ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அவர் நீண்ட நாள் படப்பிடிப்பு நடத்துவார். சொன்ன பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க மாட்டார் என்பதால் அவர் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். இந்த நிலையில் தான் கான் படத்தை தொடங்கினார். இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் தயாரிப்பாளர். சிம்பு, டாப்சி, ஜெகபதி பாபு நடித்தார்கள். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்கவில்லை.
செல்வராகவனும நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். இதில் எஸ்.ஜே சூர்யா ஹீரோ, ரெஜினா ஹீரோயின், நந்திதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதனால் செல்வராகவன் கானை கைவிட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால் செல்வராகவன் இதை மறுக்கிறார். “கான் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் எதிர்பாராத ஒன்று. தயாரிப்பாளர் தயார் என்றால் நாளைக்கே நாங்கள் படப்பிடிப்புக்கு தயார். சிம்பு உள்பட அனைவருமே கான் படத்தின் மீது ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. கான் படத்தை எடுத்து முடிப்பேன்” என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை” என்கிறார் செல்வராகவன்.