விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தியேட்டர்களுக்கு செஸ் வரி விதிப்பதை கண்டித்து கடந்த 7ந் தேதி கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடி தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் கேரள தியேட்டர் அதிபர்கள் சங்கம் மீண்டும் போராட்டம் நடத்த இருகிறது.
தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் அதிக விலைக்கு விற்பனையாவதை தடுக்க அனைத்து தியேட்டர்களில் டிக்கெட் மிஷின் வைக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து வருகிற மே 2ந் தேதி முதல் தியேட்டர் உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் மே மாதம் வெளிவருவதாக இருக்கும் படங்கள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கென்று வெளியிட இருந்த படங்கள் கடும் பாதிப்படையும் அபாயமும் இருக்கிறது.