'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆரம்பத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த தம்பி ராமைய்யா, பின்னர் மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் போன்ற படங்களை இயக்கினார். அதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த மைனா படம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வாங்கிக்கொடுத்த பிறகு பிரபல குணசித்ர நடிகராகி விட்டார் தம்பி ராமைய்யா. அதனால் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார். அந்த வரிசையில் தற்போது வின்சென்ட் செல்வா இயக்கி வரும்ட விருமாண்டியும் சிவணான்டியும் என்ற படத்திலும் லீடு ரோலில் நடித்து வருகிறார் தம்பி ராமைய்யா.
சமீபத்தில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான ஜித்தன்-2 படத்திற்கு கதை வசனம் எழுதியிருந்த வின்சென்ட் செல்வா, இந்த படத்தை நகைச்சுவை கலந்த குடும்ப கதையில் இயக்கியுள்ளார். இதில் தம்பி ராமைய்யாவுடன் இணைந்து பல காமெடியன்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தைப்பொறுத்தவரை குணசித்ர வேடத்தில் நடித்திருக்கும் தம்பி ராமைய்யா, சில செண்டிமென்ட் காட்சிகளில் கலங்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால் மைனாவுக்குப்பிறகு இந்த படமும் தனக்கொரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறாராம் தம்பி ராமைய்யா.