'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சரப்ஜித்சிங்கை அந்த நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. 25 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவரை மீட்க அரசும், அவரது சகோதரியும் போராடினார்கள். ஆனால் அவர் சிறை கலவரத்தில் கொல்லப்பட்டார். சரப்ஜித் சிறையில் வாடியதை விட அவரது சகோதரி அவரை மீட்க போராடியதுதான் வரலாற்று பதிவு. அதனை இப்போது திரைப்படமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதில் சரப்ஜித்சிங்காக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். அவரது சகோதரி தல்பிர் கவுர் வேடத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தில் சரப்ஜித் மற்றம் அவரது சகோதரி வாழ்ந்த பகுதியில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பின்போது வில்லன்கள் ஐஸ்வர்யாவை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யாராய் கால் இடறி தடுமாறி விழுந்தார். இதனால் அவருக்கு கை கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவருக்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனால் என்னால் படப்பிடிப்பு தடை பட வேண்டாம் என்று காயத்தின் வலியுடன் காட்சியை தொடர்ந்து நடித்துக் கொடுத்தார் ஐஸ்வர்யாராய்.