டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சரப்ஜித்சிங்கை அந்த நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. 25 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவரை மீட்க அரசும், அவரது சகோதரியும் போராடினார்கள். ஆனால் அவர் சிறை கலவரத்தில் கொல்லப்பட்டார். சரப்ஜித் சிறையில் வாடியதை விட அவரது சகோதரி அவரை மீட்க போராடியதுதான் வரலாற்று பதிவு. அதனை இப்போது திரைப்படமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதில் சரப்ஜித்சிங்காக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். அவரது சகோதரி தல்பிர் கவுர் வேடத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தில் சரப்ஜித் மற்றம் அவரது சகோதரி வாழ்ந்த பகுதியில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பின்போது வில்லன்கள் ஐஸ்வர்யாவை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யாராய் கால் இடறி தடுமாறி விழுந்தார். இதனால் அவருக்கு கை கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவருக்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனால் என்னால் படப்பிடிப்பு தடை பட வேண்டாம் என்று காயத்தின் வலியுடன் காட்சியை தொடர்ந்து நடித்துக் கொடுத்தார் ஐஸ்வர்யாராய்.