கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் உருவாகிக் கொண்டிருக்கிறது. சர்வதே பணம் பதுக்கல் தொடர்பான பனாமா அறிக்கை பட்டியலில் அமிதாப் பச்சன் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனை உடனடியாக அமிதாப் பச்சன் மறுத்தார் என்றாலும் அமிதாப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மத்திய அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மராட்டிய மாநில புலிகள் பாதுகாப்பு பிரச்சார தூதர் உள்ளிட்ட அரசு அளித்துள்ள பொறுப்புகளிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து அமிதாப்பச்சன் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: வருமாவரித்துறையும், அமலாக்க துறையும் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவற்றுக்கு நான் கவனத்துடன் பதிலளித்திருக்கிறேன். நான் சட்டத்தை மதிப்பவன், பனாமா அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அந்த 4 நிறுவனங்களிலும் நான் இயக்குனராக இல்லை. அந்த 4 நிறுவனங்களுடன் என்னுடைய பெயர் எப்படி இணைக்கப்பட்டது என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.
அரசு எனக்கு கொடுத்துள்ள தூதர் பதவியை பறிக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தி வருவதை அறிவேன். இதில் அரசு என்ன முடிவெடுத்தாலும் புலிகள் பாதுகாப்பு பிரச்சாரம், போலியோ விழிப்புணர்வு, தூய்மை இந்தியா திட்டம், குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட எனது சமூக பணிகளை எனது தனிப்பட்ட திறனுடன் தொடர்ந்து உழைப்பேன். இவ்வாறு அமிதாப் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.