‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'குற்றப் பரம்பரை' பட விவகாரத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களான பாரதிராஜாவும், பாலாவும் மோதிக் கொண்டிருக்கும் விவகாரம்தான் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'குற்றப் பரம்பரை' என்பது ஒரு வரலாறு அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை விட்டுவிட்டு, அந்தக் கதையை படமாக எடுத்தால் வழக்கு தொடுப்பேன் என்று சொல்வது முட்டாள் தனம் என இயக்குனர் பாலா நேற்று காட்டமாகவே தெரிவித்திருந்தார். அதோடு, தான் எடுக்க உள்ள படம் 'குற்றப்பரம்பரை' கதையே அல்ல, அந்தக் காலக் கட்டத்தில் நடந்த வேறு ஒரு கதையை கற்பனை கலந்து எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
பாலா எடுக்க உள்ள படத்தில் விஷால், ஆர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கப் போகிறார்கள். வெவ்வேறு தளத்தில் உள்ள நான்கைந்து இளைஞர்கள் ஒரே விஷயத்தால் பாதிக்கப்பட, அவர்கள் அந்த விவகாரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பாலா எடுக்க உள்ள படத்தின் கதை என்றும் சொல்கிறார்கள். இந்தக் கதையைத்தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியுடன் இணைந்து பாலா படத்திற்காக எழுதி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
இதனிடையே பாலாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், தான் 'குற்றப்பரம்பரை' படத்தை படமாக்குவதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திரையுலகத்தினரும், ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய கலைஞர்கள் இப்படி மோதிக் கொள்வதை இயக்குனர்கள் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றே பல இயக்குனர்களும் விரும்புகிறார்கள்.