ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'தெறி' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டது. 'வேதாளம்' படத்திற்கு படம் வெளியான ஒரு வாரத்திற்கு சர்வசாதாரணமாக 500 ரூபாய் கட்டணம் வைத்து பலரும் லாபத்தை அள்ளினார்கள். அந்த லாபம் முழுவதும் தியேட்டர்காரர்களையே சேர்ந்தது. அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர ரசிகர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு மேலதிகமாக வசூலித்த கட்டணம் கணக்கில் வராதது. அது வினியோகஸ்தர்களையும் சென்று சேராது, தயாரிப்பாளர்களையும் சென்று சேராது. 'வேதாளம்' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு லாபம் சில கோடிகள் மட்டும்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
'வேதாளம்' படம் போலவே 'தெறி' படத்தையும் அப்படி ஒரு விலை நிர்ணயம் செய்து லாபத்தை அள்ளலாம் என கணக்குப் போட்டார்கள் தியேட்டர்காரர்கள். ஆனால், அவர்களின் பேராசையில் ஒரு பெரிய பாறாங்கல்லே விழுந்துவிட்டது. தியேட்டர்களில் அளவுக்கதிகமான கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி வசூலிக்கும் தியேட்டர்கள் மீது புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, இது குறிப்பாக 'தெறி' படத்தை மனதில் வைத்தே செயல்படுத்தப்படலாம் என்று திரையுலக வட்டாரங்கள் அச்சமடைந்துள்ளன. அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று லாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்தவர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்களாம். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திற்கு டிக்கெட் விற்றால் எப்போது லாபத்தை அள்ளுவது என புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம்.