'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஜனனி அய்யர். தொடர்ந்து 'தெகிடி' போன்ற படங்களில் நடித்தவர், அதன்பின்னர் மலையாள பக்கம் சென்றுவிட்டார். தற்போது தமிழில் உல்டா, தொல்லைக்காட்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் என்றாலே காதல் கிசுகிசுவில் சிக்காமல் தப்புவது இல்லை, ஜனனி அய்யரும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார், இவர் வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து ஜனனி, கூறியதாவது... ''சினிமா வட்டாரத்திலேயே எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை, யாருடனும் காதல் வயப்படவில்லை. உங்களிடம் நான் கேட்பது எல்லாம் தயவு செய்து இதுபோன்று செய்தி பரப்பாதீர்கள். இப்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே இருக்கிறது என்றவர், என்னுடைய திருமணம் சரியான நேரம் வரும் கண்டிப்பாக நடக்கும், அதேசமயம் எனது திருமணம் வீட்டில் பார்த்து வைத்து செய்யும் திருமணமாக மட்டும் இருக்காது என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் ஜனனி சொல்ல வருவது, தான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.