சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
தமிழ் நடிகர்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் மார்க்கெட் உருவாகி வருகிறது. அந்த வகையில், கேரளாவைப்பொறுத்தவரை தமிழில் வெளியாகும் விஜய், அஜீத், சூர்யா என அனைத்து நடிகர்களின் படங்களும் மொழி மாற்றம் செய்யப்படாமல் தமிழிலேயே வெளியாகி வருகின்றன. அங்குள்ள ரசிகர்கள் தமிழ் நடிகர்களுக்கும் பிரமாண்ட கட்அவுட்கள் வைத்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதையடுத்து இப்போது சில தமிழ் நடிகர்களின் செல்வாக்கு ஆந்திராவிலும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விஷால், கார்த்தி என பல நடிகர்களின் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. இப்படி பல நடிகர்களின் படங்கள் ஆந்திராவில் வெளியானபோதும் சூர்யாவின் படங்கள்தான் அங்கு அதிகமாக வசூலித்து வருகிறதாம். அவர் நடித்த படங்களை பார்ப்பதற்கென்றே ஒரு ரசிகர் வட்டமும் அங்கு உருவாகியிருக்கிறதாம். அந்த வகையில், சூர்யா நடிப்பில் வெளியாகயிருக்கும் 24 படத்திற்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறர்கள்.
மேலும், சூர்யாவுக்கு அடுத்தபடியாக விஜய், அஜீத்தின் படங்களும் ஆந்திராவில் வசூலித்து வரும் நிலையில், தோழாவுக்கு பிறகு கார்த்தியின் கையும் ஓங்கியிருக்கிறதாம். அதோடு, அவர் நேரடி தெலுங்கு படத்தில் நடித்தால் ஆந்திராவில் அவருக்கும் ஒரு தனி இடம் கிடைக்கும் என்றும் தெலுங்கு சினிமாவைச்சேர்ந்த வர்கள் கூறுகிறார்கள்.