'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த அரண்மனை-2வில் பேயாக நடித்த த்ரிஷா, அதிலிருந்து தனது ரூட்டை மாற்றத் தொடங்கி விட்டார். அதன்காரணமாக, தனுஷின் கொடி படத்தில் அவருடன் எதிரும் புதிருமான ஒரு வேடத்தில் நடித்திருப்பவர், நாயகி படத்தில் இரண்டுவிதமான வேடங்களில் நடித்திருக்கிறார். ஹாரர் படமாக இருந்தபோதும் இதில் ஒரு வேடத்தில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார் திரிஷா. அதோடு தனது கேரியரில் இதுவரை நயன்தாராவுடன் இணைந்து நடித்திராத அவர் முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து விஜயசேதுபதிக்கு ஜோடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்கிறார்.
மேலும், த்ரிஷாவை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள நாயகி படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகியிருப்பதோடு, ஒரே நேரத்தில் வெளியாகவும் தயாராகி விட்டது. இப்படத்தை ஏப்ரல் 29-ந்தேதியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். முன்னதாக, நாயகி படத்தை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட வேண்டும் என்றுதான் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் விஜய்யின் தெறி வெளியாவதால் அந்த படத்திற்கு முன்னால் நாயகி த்ரிஷா காணாமல் போய்விடுவார் என்பதற்காக தேதியை தள்ளி வைத்திருக்கிறார்களாம்.