‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ்நாட்டு சினிமா தியேட்டர்களில் பெரிய ஹீரோக்கள் நடித்த புதிய படங்கள் வெளிவரும்போது தியேட்டர்களில் 120 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய் வரை சர்வசாதரணமாக விற்கப்படும். இது தொடர்பாக ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதிக கட்டணம் வசூலிப்பதை கடுமையாக தடுக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு அந்த உத்தரவை கண்டு கொள்ளாமல் இருந்ததது. தற்போது திடீரென அதிக கட்டண வசூலை தடுக்க தனிப்படை அமைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரைப்படத்தை திரையரங்கில் திரையிட அரசு அனுமதி கட்டணம் நிர்ணயித்துள்ளது. நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் திரைப்பட ஒழுங்குமுறை விதிகள் 1957ன்படி குற்றமாகும். இதனை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதன்படியும் பொதுக்களின் புகார்களை விசாரித்து அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையில் போலீஸ் உதவி கமிஷனர், வணிகவரித்துறை அலுவலர் மற்றும் வருவாய்துறை அதிகாரி இடம் பெற்றிருப்பார்கள். அதிக கட்டணத்துக்கு டிக்கெட் விற்பனை செய்தால் பொதுமக்கள் 044-23452359 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கக வேண்டும் என்ற கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.