தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'குற்றப்பரம்பரை' படம் தொடர்பாக இயக்குநர்கள் பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று(ஏப்.,3ம் தேதி) உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் பாரதிராஜா தன்னுடைய குற்றப்பரம்பரை படத்தை துவக்கினார். இந்நிலையில் இப்படம் தொடர்பாக இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்த பாலா இப்போது முதன்முறையாக வாய்திறந்துள்ளார்.
'குற்றப்பரம்பரை' தொடர்பாக பாரதிராஜா தொடர்ந்து தன்னை பற்றி அவதூறு பேசி வருவதற்கு பதிலடி தரும் விதமாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநர் பாலா. அப்போது அவர் பாரதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பாலா பேசியதாவது... நான் இங்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வரவில்லை. நிறைய காயம்பட்டிருக்கேன். ஆனால் இங்கு உண்மையை சொல்ல கடமைப்பட்டிருக்கேன். எங்களுடைய சண்டையால் பூமிக்கு எந்த பயனும் இல்லை
வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து பாரதிராஜா, 'குற்றப்பரம்பரை' படத்தை இயக்க பூஜை போட்டிருக்கிறார். அந்தப்படத்தின் கதை கூட எனக்கு தெரியாது. நான் வேலராமமூர்த்தி எழுதிய 'கூட்டாஞ்சோறு' நாவலில் இருக்கும் சில சம்பவங்களை எடுத்துக்கொண்டு ஒரு கதையை உருவாக்கியிருக்கிறேன். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது. பாரதிராஜா கதைக்கும், என் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய படத்துக்கு வேறு தலைப்பு வைக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும்.
ஆனால் பாரதிராஜா செய்வது, பேசுவது எல்லாம் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. என் எச்சிலை பாலா திண்ண மாட்டான் என நினைக்கிறேன் என்று பாரதிராஜா கூறுகிறார். வயது ஏற ஏற குழந்தை போல ஆகிடுவாங்க என்று சொல்வாங்க, ஆகையால் அது இயல்பு என்று விட்டுவிட்டேன்.
ரத்தின குமார் என்பவர் தன்னுடைய கதை, என் மேல் வழக்கு போடுவேன் என்கிறார். அதோடு நான் பாரதிராஜாவால் விரட்டியடிக்கப்பட்டேன் என்கிறார். நான் பாலுமகேந்திரா தவிர யாரிடமும் பணியாற்ற செல்லவில்லை. இவர் ஒரு பேராசிரியர் என்கிறார், எப்படித்தான் இவரிடத்தில் மாணவர்கள் படித்தார்கள் என்று தெரியவில்லை. ரத்தினகுமார் மாதிரி ஒரு சந்தர்ப்பவாதியை நான் பார்த்தது கிடையாது.
பாரதிராஜாவும், ரத்னகுமாரும் என்னைப்பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 4 முறை என்னைப் பற்றி பேசியிருக்கிறார்கள், நான் மன்னித்து விட்டேன். ஆனால் இனி என்னால் பொறுமையாக இருக்க முடியாது. இனி என்னைப்பற்றி ஒரு வார்த்தை பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன், அது அவர்களுக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதோடு, வரலாற்று நிகழ்வை ஒருவர் மட்டும்தான் படமாக்கலாம் என்று எந்த விதியும் இல்லை. யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். அதோடு, நீங்க மண், ஈரம், வீரம் என என்ன வேண்டுமானால் படம் எடுங்கள். சினிமாவை இனமா, மதமா பிரித்தால் அது அயோக்கியதனம். சினிமா என்பது ஒரு உலகமொழி என்றார்.