நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சூர்யா-ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் முதன்முதலாக இருவரும் இணைந்தனர். தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்தவர்கள் பின்னர் இல்லற வாழ்விலும் தங்களை இணைத்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பேசப்பட இப்போது மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கூறினார். ஆனால் அது யாருடைய படம் என்ற விபரம் எல்லாம் அவர் கூறவில்லை.
இதனிடையே, 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா தன்னுடைய அடுத்தப்படத்தில் ஜோதிகாவை முதன்மை நாயகியாக கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இதில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்தது. இந்தப்படம் தவிர சூர்யாவும், ஜோதிகாவுமே இணைந்து ஒரு முழுநீள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது இயக்குநர் பிரம்மாவின் படமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.