அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குனராக வெற்றி பெற்ற சசிகுமார், நடிகராக மாறியதும், படங்கள் இயக்குவதை மறந்துவிட்டார். பல வருட இடைவெளிக்குப்பிறகு ஈசன் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தின் தோல்விக்குப் பிறகு இனி டைரக்டர் நாற்காலி வேண்டாம், நடிகராகவே இருந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் தான் 'ஈசன்' படத்திற்குப் பிறகு வேறெந்த படத்தையும் அவர் இயக்கவில்லை.
பாலுமகேந்திராவுக்காக 'தலைமுறை' படத்தை தயாரித்த சசிகுமாருக்கு அப்படம் நஷ்டத்தையே கொடுத்தது. பாலாவுக்காக 'தாரை தப்பட்டை' படத்தை தயாரித்தார். அதிலும் பெரிய நஷ்டம். நடிகராகவும் அப்படத்துக்காக இரண்டு வருடங்களை வீணடித்தார். இப்படியாக கடந்த காலங்களில் பட்ட அடி காரணமாக தற்போது சுதாரித்துக் கொண்டு வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது அறிமுக இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் 'வெற்றிவேல்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இப்படத்திற்கு சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 21 நிமிடங்கள். சசிகுமாரின் முந்தைய படமான 'தாரை தப்பட்டை'க்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டது. சுந்தரபாண்டியன், பிரம்மன் படத்தைப்போலவே தற்போது மறுபடியும் 'வெற்றிவேல்' படத்திற்கும் யு சான்றிதழ் கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியில் இருக்கிறார் சசிகுமார்.