குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
2012ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் - கலகலப்பு. வசூல் ரீதியாக இப்படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதால் கலகலப்பு வெளியானதில் இருந்தே அதன் இரண்டாம் பாகம் வரவிருப்பதாக சொல்லப்பட்டது. சுந்தர்.சியும் அதை ஆமோதித்து வந்தார். கலகலப்பு - 2 குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. கடைசியாக சித்தார்த் ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. அரண்மனை-2 படத்தில் சித்தார்த்தை டம்மியாக்கியதால் அவர் கலகலப்பு-2 படத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டார். அதன் பிறகு ஆர்யா, நயன்தாரா காம்பினேஷனில் கலகலப்பு-2 திட்டமிடப்பட்டது. இந்த தகவல் ரகசியமாகவும் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் கலகலப்பு 2 உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. இச்செய்திக்கு குஷ்பு தற்போது மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
"சுந்தர்.சி + ஆர்யா + நயன் = கண்டிப்பாக வெற்றிதான். கலகலப்பு 2 குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் படு நக்கலாக தெரிவித்திருக்கிறார் குஷ்பு.
இதன் பின்னணி என்ன? கலகலப்பு- 2 படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று நயன்தாரா மறுத்துவிட்டார்.