ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மைக்கேல் ஜாக்சனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. உலகளவில் தனது டான்ஸாலும், பாப் பாடல்களாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். இன்றைக்கு இருக்கும் டான்ஸர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருப்பவர் மைக்கேல் ஜாக்சன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் இன்னும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளாகவே இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனை போலவே இந்தியாவிலும் ஒரு நடன சூறாவளி இருக்கிறார். அவர் தான் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா. தனது அற்புதமான நடனத்தால் ரசிகர்களை ஈர்த்தவர். டான்ஸராக தன் வாழ்க்கையை தொடங்கிய பிரபுதேவா, நடிகர், இயக்குநர் என வளர்ந்து இன்றைக்கு தயாரிப்பாளராக உயர்ந்து இருக்கிறார்.
இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மைக்கேல் ஜாக்சனின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரபுதேவா இன்று(ஏப்.,4ம் தேதி) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபுதேவா... ''நேற்று தான் மைக்கேல் ஜாக்சன் சிலையை திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்தமானவர் மைக்கேல் ஜாக்சன். அவருடைய சிலையை நான் என் கையால் திறந்து வைத்ததை பெருமையாக கருதுகிறேன். 10 வருடம் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடிக்கும் கதை நயன்தாரா சம்பந்தப்பட்ட கதை அல்ல. மீண்டும் விஜய்யுடன் எப்போது படம் பண்ணுவேன் என்று தெரியவில்லை. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்றார்.