'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறிது காலம் அரசியல் ஓய்வு எடுத்துள்ள டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் சர்தார் கப்பர் சிங் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இயக்குனர் பாபி இயக்கத்தில் ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி யுகாதியில் இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாது தமிழகத்திலும் அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் தொழில்நுட்ப ரீதியாக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இதனால் படத்தின் தொழில்நுட்ப விடயங்களுக்கு அதிக அக்கறை எடுத்து வருகின்றார் பவன் கல்யாண். இப்படத்தின் டிஐ வேலை நடக்கும் பிரசாத் லாபிற்கு சென்ற பவன் கல்யாண் மேற்பார்வை செய்துள்ளார். மேலும் காரில் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கிய பவன் கல்யாண் இரவு முழுவதும் டிஐ வேலைகளை மட்டுமே கவனித்ததாக படக்குழுவினர் கூறுகின்றார்.
இதே போல் இப்படத்தின் பாடல் படப்பிடிப்பிற்கு சுவிட்சர்லாந்த் சென்ற பவன் கல்யாண் அங்கும் தூங்காமல் ஓய்வின்றி உழைத்ததாக தகவல்கள் வெளிவந்தன. சர்தார் படத்தின் இறுதி கட்ட பணிகளை கவனித்து வரும் பவன் கல்யாண் இதற்காக தனது சகோதரர் சிரஞ்சீவி மகளின் திருமணத்திற்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தூங்காமல் உழைக்கும் பவன் கல்யாணுக்கு சர்தார் வெற்றியைத் தேடி தருமா?
சிறிது காலம் அரசியல் ஓய்வு எடுத்துள்ள டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் சர்தார் கப்பர் சிங் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இயக்குனர் பாபி இயக்கத்தில் ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி யுகாதியில் இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாது தமிழகத்திலும் அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் தொழில்நுட்ப ரீதியாக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இதனால் படத்தின் தொழில்நுட்ப விடயங்களுக்கு அதிக அக்கறை எடுத்து வருகின்றார் பவன் கல்யாண். இப்படத்தின் டிஐ வேலை நடக்கும் பிரசாத் லாபிற்கு சென்ற பவன் கல்யாண் மேற்பார்வை செய்துள்ளார். மேலும் காரில் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கிய பவன் கல்யாண் இரவு முழுவதும் டிஐ வேலைகளை மட்டுமே கவனித்ததாக படக்குழுவினர் கூறுகின்றார்.
இதே போல் இப்படத்தின் பாடல் படப்பிடிப்பிற்கு சுவிட்சர்லாந்த் சென்ற பவன் கல்யாண் அங்கும் தூங்காமல் ஓய்வின்றி உழைத்ததாக தகவல்கள் வெளிவந்தன. சர்தார் படத்தின் இறுதி கட்ட பணிகளை கவனித்து வரும் பவன் கல்யாண் இதற்காக தனது சகோதரர் சிரஞ்சீவி மகளின் திருமணத்திற்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.