ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான பிரமாண்ட சரித்திர படம் பாகுபலி. இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இப்படம் உலகளவில் சுமார் ரூ.500 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. அடுத்தாண்டு ஏப்.,14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
இதனிடையே முன்பு ஒரு பேட்டியில் ‛பாகுபலி' படம் இரண்டு பாகத்தோடு முடியாது பாகுபலி-3, 4 என தொடரும் என இயக்குநர் ராஜமெளலி கூறியிருந்தார். ஆனால் பாகுபலி படம் இரண்டாம் பாகத்தோடு முடிந்துவிடும் என ராஜமெளலியின் அப்பாவும், இப்படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இப்போது கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயேந்திர பிரசாத் கூறியதாவது... ''பாகுபலி படத்தில் நான் எதிர்பார்த்ததை விட பிரபாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். பாகுபலியின் முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் இன்னும் ரசிப்பார்கள். இப்படத்தின் கதையை எழுதும்போதே சிவகாமி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனை மனதில் வைத்து தான் எழுதினேன். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். பாகுபலி படத்தின் கதை இரண்டாம் பாகத்துடனேயே முடிகிறது. மூன்றாம், நான்காம் பாகம் எல்லாம் வராது என்றவர், விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், தற்போது அதற்கான பணிகள் மும்முரமாய் நடந்து வருவதாகவும், விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார் விஜயேந்திர பிரசாத்.