தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்சில் 8 வருடங்களாக பணியாற்றி வருபவர் டைரக்டர் ராஜேஷ்.எம் செல்வா. இவர்தான் கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கினார். கமல், திரிஷா, பிரகாஷ்ராஜ் என பலர் நடித்த அந்த படத்தை சிறப்பாக இயக்கி கமலிடம் பாராட்டு பெற்றார் அவர். அப்படம் பாபநாசத்திற்கு பிறகு கமலுக்கு பெரிய ஹிட்டாக அமையவில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்ட படமாக அமைந்தது. அதையடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் ராஜேஷ்.எம்.செல்வா.
இந்நிலையில், டைரக்டர் ராஜேஷ். எம் செல்வாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அந்த குழந்தைக்கு ஹோசிகா மிருணாளினி என்று பெயர் சூட்டியுள்ளார் கமல். இதை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள டைரக்டர் ராஜேஷ்.எம் செல்வா, ஹோசிகா என்றால் ஸ்டார், மிருணாளினி என்றால் தாமரை என்று அர்த்தம். இது ரொம்ப அற்புதமான பெயர். என் வாழ்க்கையில் நெகிழ்ச்சியான தருணமும்கூட. எதிர்காலத்தில் என்மகளுக்கு மறக்க முடியாத பரிசாக இருக்கப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.