'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
கௌதம் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்தநிலையில், அந்தப் பட பணிகள் முடங்கின. இன்னும் படமாக்கபட வேண்டியவற்றில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் பாடல் காட்சியும் அடக்கம். இந்தப் பாடலை விரைவில் படமாக்கவிருக்கிறார்களாம்.
இன்னொருபுறம் கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் 2 வாரங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது 2வது கட்ட படப்பிடிப்புக்காக துருக்கி செல்லவிருக்கிறார்களாம். பாடல் மற்றும் சில காட்சிகளை அங்கு படமாக்க திட்டமிட்டிருக்கிறராம் கௌதம் மேனன். இதனால் இந்த வார இறுதியில் தனுஷ், கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழு துருக்கி செல்லவிருக்கிறது.
துருக்கி செல்வதோடு, சிம்பு, மஞ்சிமா இருவரையும் அழைத்துச் சென்று 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் பாடல் காட்சியையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் கௌதம். இதை தனுஷிடம் சொன்னபோது அவர் ஆர்வம் காட்டவில்லையாம். தான் செல்லும் இடத்துக்கு சிம்பு வருவது தனுஷுக்க தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட்டில் தகவல் அடிபடுகிறது.