பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் நேரம் படம் வெளியானபோது இந்தப்படத்திலும் புதுமுகம் தான் ஹீரோவா என கொஞ்சம் பயத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்தனர்.. காரணம் தமிழ் ரசிகர்களை புதுமுக ஹீரோக்கள் அவ்வளவு டார்ச்சர் படுத்தி வைத்திருந்தனர். ஆனால் அதில் ஹீரோவாக நடித்த நிவின்பாலியின் மிகையில்லாத நடிப்பு அட இந்தபையன் பரவாயில்லையே என்று சொல்லவைத்தது.. காரணம் அதற்கு முன்பே மலையாளத்தில் அறிமுகமாகி நடித்துவிட்டுத்தான் தமிழுக்கு வந்திருந்தார் நிவின்பாலி.. நேரம் படத்திற்குப்பின் அவர் மலையாளத்தில் நடித்த தட்டத்தின் மறயத்து படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் சென்னையில் தான் நடைபெற்றன.
அப்போது அந்தப்படத்தின் இயக்குனர் வினீத் சீனிவாசனும் நிவின்பளியும் சென்னையில் தங்கி வேலைகளை கவனித்து வந்தனர். ஓய்வாக இருக்கும் நேரங்களில் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தாலும் கூட நேரம் பட நாயகன் நிவின்பாலியை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.. அதன்பின் ஒரு வடக்கன் செல்பி படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை வந்தபோது வெளியில் நடமாடினால் ஒருசிலர் மட்டும் நிவின்பாலியை அடையாளம் கண்டு கைகுலுக்கும் அளவுக்கு கொஞ்சமே கொஞ்சமாக இங்கே பிரபல ஆகியிருந்தார்...
அதன்பின் கடந்த வருடம் வெளியான பிரேமம் படம் மலையாளத்தை விட சென்னையில் ஹிட்டாகி 300 நாட்கள் ஓடியதில் ரொம்பவே பேமஸ் ஆகிவிட்டார் நிவின்பாலி.. இப்போது முன்னைப்போல சுதந்திரமாக தனி ஆளாக சென்னையில் நடமாட முடியாது என்கிற அளவுக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார் நிவின்பாலி.. இதை சில வருடங்களாக அவருடன் இருந்து அனுபவப்பூர்வமாக நேரில் பார்த்த அவரது நண்பரான, அவரை அறிமுகப்படுத்திய இயக்குனரான வினீத் சீனிவாசன் தான் பெருமையுடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.