Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோர்ட்டில் தலைகுனிந்த பிரபுதேவா! சொத்து கிடைத்த சந்தோஷத்தில் ரமலத்!!

03 ஜூலை, 2011 - 11:30 IST
எழுத்தின் அளவு:

விவாகரத்து வழக்கு விசாரணைக்காக சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு வந்த பிரபுதேவா தலைகுனிந்தபடி இருந்தார். அவரது காதல் மனைவி ரமலத் சொத்து கிடைத்த சந்தோஷத்தில் இருந்தார். நயன்தாராவுடனான காதலுக்கு பிறகு, ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்த பிரபுதேவாவுக்கு முதலில் முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். என் கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்றெல்லாம் போர்கொடி தூக்கினார். பின்னர் நடத்தப்பட்ட பேரத்தில், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ரமலத் பெயருக்கும், குழந்தைகள் பெயருக்கும் கொடுக்க பிரபுதேவா சம்மதித்ததைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு செய்தனர். இந்த வழக்கு சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. 6 மாத கால அவகாசத்திற்கு பிறகு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரபுதேவாவும், ரமலத்தும் தனித்தனி கார்களில் கோர்ட்டுக்கு வந்தனர். உள்ளே சென்றபோதும், வெளியே வந்தபோதும் பிரபுதேவா தலைகுனிந்தபடியே இருந்தார். ரமலத் கோர்ட் வளாகத்துக்குள் வந்தபோது 15 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய கணவனிடம் இருந்து பிரியப் போகிறோமே... என்ற வருத்தம் துளியும் இல்லாமல் இருந்தார். பின்னர் பிரபுதேவாவுடன் சிரித்து பேசினார். கோர்ட்டில் ரமலத்துக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டபடி 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் கொடுப்பதற்கான ஆவணங்களை பிரபுதேவா தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ரமலத் சந்தோஷமாக காணப்பட்டார்.

ரமலத்தின் வக்கீல் பி.ஆனந்தன் அளித்த பேட்டியில், பிரபுதேவாவும், ரமலத்தும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். பிரபுதேவா வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டியது இருப்பதால் முன்கூட்டியே விசாரணை நடத்துமாறு கோர்ட்டில் மனு செய்தார். அதன்படி, இன்று விசாரணை நடத்தப்பட்டது. பிரபுதேவாவும் ரமலத்தும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தனது குழந்தைகளின் பராமரிப்புக்காக ரமலத்திற்கு வழங்குவதாக இருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களையும் பிரபுதேவா சமர்ப்பித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது, என்றார்.

ஒப்படைக்க வேண்டிய சொத்துக்களை பிரபுதேவா ஒப்படைத்து விட்டதால் ரமலத்துடனான விவாகரத்துக்கு பிரச்னை இல்லை என்று வக்கீல்கள் பேசிக் கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

06 ஜூலை, 2011 - 16:24 Report Abuse
 பெண்ணால் கெட்ட கஞ்சமாலை "தறுதலையின் கேனயாட்டம்" இப்பிடி ஒரு படம் பிரபுவ வச்சு இயக்கலாம்னு இருக்கேன்..என்ன பிரபு சார் நீங்க தான் இந்த கதைக்கு
Rate this:
குமார் - Mumbai,இந்தியா
04 ஜூலை, 2011 - 14:54 Report Abuse
 குமார் இந்த டீலு எனக்கு ரொம்ப பிடுசுருக்கு ....
Rate this:
சிவா - madurai,இந்தியா
04 ஜூலை, 2011 - 13:13 Report Abuse
 சிவா ஆல் தி பெஸ்ட் பிரபுதேவா
Rate this:
சாவடி ஆண் - mendalpen kurukku theru,இந்தியா
04 ஜூலை, 2011 - 11:13 Report Abuse
 சாவடி ஆண் சினிமாவை வாழ்க்கையாக பார்க்காமல் வெறும் பொழுது போக்காய் பார்த்து அதில் உள்ள நல்லது கெட்டதுகளை அலசி கருத்து எழுதுறோம்.உங்களுக்கு இஷ்டம் இல்லேன போய்கிட்டே இருங்க..
Rate this:
csj - chennai,இந்தியா
04 ஜூலை, 2011 - 10:33 Report Abuse
 csj 15 வருஷம் வாழ்கை நடத்தி வேறு பெண்ணுடன் தன குசந்தைகளை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் செல்பவரி பார்த்து சிரிக்க வேண்டும் என்பதே பாரதி கண்ட புதுமைபெண் .
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in