டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா, தமிழில் கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ரட்சகன் படத்தில் நடித்தார். ப்ரவீன்காந்த் இயக்கிய அந்த படத்திற்கு பிறகு நாகார்ஜூனா நடித்த சில தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் ஆகின. அதையடுத்து பயணம் படத்தில் நடித்தவர், இப்போது தோழா படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தைப்பார்த்த பல கோலிவுட் சினிமா கலைஞர்கள், நாகர்ஜூனாவின் நடிப்பு வெகுவாக பாதித்த விட பலர் அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.
இதுபற்றி நாகர்ஜூனா கூறுகையில், எனக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் ஏராளமான நண்பர்கள் உள்ளன. அந்த வகையில், தோழா படம் ரிலீசானதும் என்னை நீண்டகாலமாக தொடர்பு கொள்ளாமல் இருந்த பல தமிழ் சினிமா நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு தோழா படத்தில் எனது நடிப்பு குறித்து கருத்து சொன்னார்கள். அதோடு என்னை தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அந்த வகையில், நடிகை குஷ்பு தோழாவில் எனது நடிப்பை சீன் பை சீன் விமர்சித்து என் மனதில் இடம் பிடித்து விட்டார். அதேபோல் நடிகை சரண்யா மற்றும் எனது மனைவி அமலா உள்ளிட்ட மேலும் சிலரும் என்னை மனதார வாழ்த்தியது என்னால் மறக்கவே முடியாது. தமிழ் நடிகர் நடிகைகள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்கிறார் நாகார்ஜூனா.