ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க உள்ளாராம். விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படம் வெற்றி படமாக அமைந்ததால் அவரை வைத்து தற்போது மீண்டும் படம் எடுக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெயரும் வைத்துள்ளார். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், தலைப்பில் ரெண்டு காதல் என்று வந்துள்ளதால், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவுக்கு தொடர்ந்து வெற்றி படங்கதள கொடுத்து வரும் விஜய் சேதுபதியுடன் முன்னணி நடிகைகள் நடிக்க வைக்க நினைத்துள்ளனர். இதனால் ஏற்கெனவே நானும் ரவுடி தான் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த நயன்தாராவை இப்படத்தில் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யலாம் என முடிவு செய்தனர்.
இரண்டாவது ஹீரோயினாக த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என நினைத்து, அவரிடம் கேட்டதற்கு முதலில் மறுத்து விட்டாராம். தற்போது, த்ரிஷா இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம். அதனால் ஒரே படத்தில் நயன்தாரா, த்ரிஷாவுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் விஜய்சேதுபதி.