ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போக்கிரிராஜா, உயிரே உயிரே படங்களுக்குப்பிறகு ஜெயம்ரவியுடன் போகன் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ரோமியோ ஜூலியட் லட்சுமண் இயக்கும் இந்த படத்திலும் முந்தைய படத்தைப்போலவே ஹன்சிகாவுக்கு நல்ல வெயிட்டான நாயகி வேடம்தானாம். அதனால் அதிகப்படியான ஹோம் ஒர்க் செய்து அந்த படத்தில் இன்னும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண திட்டமிட்டிருக்கிறாராம் ஹன்சிகா. அதோடு, இதற்கு முன்பு கதை விசயத்தில் அவுட்லைனை கேட்டு விட்டு ஓகே சொல்லி வந்த ஹன்சிகா இப்போது நயன்தாரா பாணியில் சீன் பை சீன் துருவி துருவி கேட்கிறாராம். தனக்கு கதையில் போதுமான திருப்தி இல்லையேல் நேரடியாகவே கதை பிடிக்கவில்லை என்றும் கூறி விடுகிறார்.
மேலும், தமிழில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியான படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, இப்போது தெலுங்கிலும் நடிப்பதில் ஆர்வத்தை திருப்பியிருக்கிறார். 2014ல் ரவிதேஜாவுடன் பவர் படத்தில் நடித்தவர் அதன்பிறகு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. இப்போது தமிழில் படவாய்ப்புகள் குறைந்திருப்பதால் இந்த நேரத்தில் தெலுங்கில் நடித்து தன்னை பிசியாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது ஐதராபாத் சென்று சில டைரக்டர் களிடம் கதை கேட்டு வருகிறார். குறிப்பாக, தமிழைப்போலவே முன்னணி ஹீரோக்களின் படம் என்பதில் இருந்து மாறுபட்டு கதைக்கே முதலிடம் என்கிற ரீதியில் புதிய படவேட்டையில் இறங்கியிருக்கிறார் ஹன்சிகா.