'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருமணத்திற்குப்பின் மீண்டும் படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் தான் கொஞ்ச நாட்கள் இருந்துவந்தார் மீரா ஜாஸ்மின். காரணம் மீரா ஜாஸ்மின் நடிக்க வந்து பதினான்கு வருடம் ஆகிவிட்டது. இப்போது திருமணமும் பண்ணிவிட்டார். வயதோ முப்பத்து ஐந்தை தொட்டுவிட்டது. இனி கதாநாயகியாகவெல்லாம் நடிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. ஆனால் அவரை கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக நடிக்கச்சொல்லி அவ்வப்போது அழைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்போது அப்படி தேடிவந்துள்ள படம் தான் 10 கல்பனகள். அதாவது 10 கட்டளைகள் என்று அர்த்தம்.
பிரபல எடிட்டரான டான்மேக்ஸ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். தமிழில் ஏற்கனவே பெண் சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த இவருக்கு மலையாளத்தில் இதுதான் முதல் போலீஸ் படம். இந்தப்படத்தில் அனூப் மேனன், முரளி கோபி ஆகியோர் நடிக்க இன்னும் முக்கிய வேடங்களில் அனுமோல், கனிகா ஆகியோர் நடிக்க உள்ளனர்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்-25ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து தான் தனது திரையுலக பயணத்தை தீர்மானிக்க இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.