'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நாதஸ்வரம் தொடருக்கு பின் திருமுருகன் இயக்கி வரும் தொடர் குலதெய்வம். தற்போது சீரியலை வெளியூரில் எடுப்பது டிரண்ட் என்பதால் தனது நாதஸ்வரம் தொடரை காரைக்குடியில் எடுத்தார். குலதெய்வம் தொடர் சென்னை, குற்றாலம், தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வந்தது. கதை எந்த பகுதியில் நடக்கிறதோ அங்கேயே சென்று படப்பிடிப்பு நடத்துவதையே வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது கதை வடநாட்டில் நடக்கிறது. இதனால் ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அனுமதி கிடைக்கவில்லை. வட நாடுகளில் ஹோலி பண்டிகை உள்ளிட்ட பல பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் அங்கு படப்பிடிப்பு நடத்துவது தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும் என்ற கூறி அனுமதி தர மறுத்துவிட்டனர்.
இதனால் கதையை அண்டை மாநிலங்களில் நடப்பதாக மாற்றி தற்போது மைசூரில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அங்குள்ள நஞ்சுண்டபுரம் கோவில், அரண்மனை, பிருந்தாவன் ஆகிய பகுதிகளில் நடப்பிடிப்புகள் நடந்து வருகிறது.