ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
விஜய் நடித்த படங்களின் கேரள விநியோக உரிமையை வாங்கி அங்கே விஜய் நடிக்கும் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் ஷிபு தமீன்தான். அவற்றில் பல படங்கள் ஷிபுவுக்கு கோடிக்கணக்கில் லாபத்தையும் சில படங்கள் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தன்னுடைய படங்களின் கேரள விநியோகஸ்தர் என்ற அறிமுகத்தில்தான் ஷிபுவின் தயாரிப்பில் புலி படத்தில் நடிக்க விஜய் கால்ஷீட் கொடுத்தார். புலி படம் ஷிபுவை பல கோடிக்கு கடனாளியாக்கிவிட்டது. எனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'தெறி' படத்தின் கேரள விநியோக உரிமையை ஷிபு வாங்கவில்லை.
'தெறி' படத்தின் கேரள விநியோக உரிமையை ஷிபு வாங்கவில்லை என்று தெரிந்ததும் சில விநியோகஸ்தர்கள் தாணுவை அணுகினார்கள். அப்படி அணுகியவர்களில் நடிகர் பிருத்திவிராஜின் 'ஆகஸ்ட் சினிமாஸ்' என்ற நிறுவனமும் அடக்கம். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் நடிகர் பிருத்விராஜுக்கு சொந்தமானது என்பதை அறிந்த தாணு, விலையைப் பற்றி கவலைப்படாமல் அவருக்கே தெறி படத்தின் கேரள உரிமத்தைக் கொடுத்துவிட்டாராம்.
இந்த நிறுவனம் வாங்கி வெளியிடும் முதல் தமிழ் படம் 'தெறி'தானாம். விஜய் நடிக்கும் படங்களுக்கு கேரளாவிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தை அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் மாநிலமும் கேரளா தான். தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று தான் மலையாள புத்தாண்டு தினமான விஷுவும் வருகிறது. அதனால விஜய்யின் 'தெறி'யை மிகப் பிரமாண்டமான முறையில் கேரளாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தெறி படத்தை எண்ணி கேரளத்தின் ஹீரோக்களே கிலியில் இருப்பதாக கேள்வி.