தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னாள் கனவு கன்னி ஜெயபிரதா தயாரிப்பில் அவரது மகன் சித்து நடித்துள்ள படம் உயிரே உயிரே. ஹன்சிகா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது இஷ்க் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ராஜசேகர் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனுப்ரூபன் இசை அமைத்துள்ளார். விரைவில் படம் வெளிவர உள்ளது. தனது மகன் சித்துவை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தி ஜெயப்பிரதா பேசியதாவது:
நான் எத்தனை படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத படம். எங்களது புரொடக்சன் கம்பெனியில் பல்வேறு மொழிகளில் நாங்கள் படங்கள் தயாரித்துள்ளோம். இந்தப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு எனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறோம். எனக்கு தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பு வேறு எங்கும் கிடைக்காதது. என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் இந்தத் துறைக்கு வந்தால் அது தமிழில் இருந்து தான் தொடங்கவேண்டும் என்பது என் கனவு. இந்தப் படம் மூலமாக அது நிறைவேறியுள்ளது.
லெஜண்ட்ரி இயக்குநர் சத்யஜித்ரே என்னிடம், நடிகைகளிலேயே நான் மிக அழகான பெண் என்று கூறுவார். ஆனால் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை அழகே அழகேஎன வர்ணித்தது எனக்கு சற்று பொறாமையாகத் தானிருந்தது. அதற்கேற்ப ஹன்சிகாவும் அழகாக இருக்கிறார். என் இளவயது நினைவுகளை தூண்டுகிறவராக இருக்கிறார். ஹன்சிகாவின் நடிப்பு இந்தப் படத்தின் மூலம் இன்னும் மெருகேறியுள்ளது. அவர் இன்னும் பெரிய இடத்துக்கு வருவார். இந்தப் படத்தில் நடிக்க கேட்டபோது புதுமுகம் என்றும் பாராமல் என் மகனுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்த படத்தில் நான் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். எனக்கு ஆதரவு தந்ததைப்போலவே என் மகனுக்கும் தமிழக மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஜெயப்பிரதா கூறினார்.