'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
அரசியல் ஆகட்டும், சினிமா ஆகட்டும் தலைவர்கள் எப்படியிருக்கிறார்களோ, அப்படியேதான் தொண்டர்களும் இருப்பார்கள். தலைவரை எப்படியாவது குஷிப்படுத்த வேண்டும் என தொண்டன் நினைப்பான். தொண்டன் தனக்காக என்ன செய்வான் என தலைவர்களும் நினைப்பார்கள். இதில் தொண்டர்களுக்கு லாபமோ, இல்லையோ தலைவர்களுக்கு நல்ல லாபம்தான். தொண்டர்கள் தங்கள் பின்னால் வரும் வரைதான் ஒரு தலைவருக்கு புகழும் இருக்கும். அரசியலில் கூட 50 வருடங்களை ஓட்டிவிடலாம். ஆனால், சினிமாவில் தொண்டர்கள் என்பவர்கள் ரசிகர்கள்தான். அவர்கள் இல்லாமல் 5 வருடங்கள் கூட ஓட்ட முடியாது.
ஒரு புதுப் படம் வந்தால் கட்-அவுட்டுகளுக்கும், போஸ்டர்களுக்கும் பாலாபிஷேகம் செய்யும் நடைமுறை தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதிலும் ரஜினிகாந்த்தை அவருடைய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ஆக பார்க்க ஆரம்பித்த பிறகு அது அதிகமானது. இன்று அது நேற்று வந்த அதர்வா வரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பரிதாபத்துக்குரியது.
விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அவர்கள் அபிமான நடிகரின் படம் வந்தால் செய்யும் ஆர்பாட்டங்கள் அளவுக்கதிகமானவை. கடந்த வருடத்தில் கூட கேரளாவில் விஜய் ரசிகர் ஒருவர் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது தவறி விழுந்து மரணமடைந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்ற விஜய் அவருடைய குடும்பத்திற்கு நிதி உதவி செய்தார். அந்த பணம் அந்த ரசிகனையே நம்பியிருந்த குடும்பத்திற்கு போதுமா.?
உடனே, தன்னுடைய ரசிகர்கள் இனி இப்படி செய்யவே கூடாது என்று உத்தரவு போட்டு, அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கலாம். அஜித், அவருடைய ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பிறகும் அவருடைய ரசிகர்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு நின்றாலும் பரவாயில்லை அஜித், விஜய் ரசிகர்கள் இருவருமே சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கடும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை அஜித்தும், விஜய்யும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இனியாவது, தங்களது ரசிகர்களை திருத்தும்படியான நடவடிக்கைகளில் அஜித்தும், விஜய்யும் இறங்குவார்களா.?, தங்கள் நலனை விட தங்கள் ரசிகர்களின் குடும்பம் தான் முக்கியம், பாலாபிஷேகம் செய்து வீணடிக்கும் பாலை அதைக் கூட குடிக்க முடியாத குழந்தைகளிடம் சேர்ப்பார்களா?.
வழக்குத் தொடர்ந்தால் தான் அதையும் கவனிப்பார்கள் என்றால், அதற்கும் ரஜினிக்கு எதிராக ஒருவர் வழக்கு தொடர்ந்தது போல யாராவது செய்ய மாட்டார்களா என்ன?.