‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய், அஜித், சூர்யா போன்ற எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் தமிழ் சினிமாவின் எப்போதும் ஒரே சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிக்கான மவுசு இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது. அவரது படங்கள் ரிலீஸாகும் போது தியேட்டர்கள் எந்தளவுக்கு களைகட்டும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. ரஜினியின் கட்-அவுட்டிற்கு மாலை, பாலாபிஷேகம் என கொண்டாடுவார்கள். ஒரு திருவிழா கொண்டாட்டம் போல ரஜினியின் படம் ரிலீஸாகும் போது ஒவ்வொரு தியேட்டரும் களை கட்டும். அந்தளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த்.
தற்போது 'கபாலி' படத்தை முடித்துவிட்டு, ஷங்கரின் எந்திரன்-2வான '2ஓ' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டமே இப்போது ரஜினிக்கு எதிராக திரும்பியுள்ளது. பெங்களூரு கோர்ட் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏன்.? எதற்காக நோட்டீஸ்.?
பெங்களூரை சேர்ந்த கர்நாடகா கன்னட தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் என்பவர் பெங்களூரு மேயோ ஹால் சிட்டி சிவில் கோர்ட்டில் மார்ச் 26ம் தேதி வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் அவரின் கட்-அவுட், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். இதனால் எவ்வளவோ லிட்டர் பால் வீணாகிறது. எனவே ரஜினி, தனது ரசிகர்களுக்கு இதுபோன்று பாலை வீணாக்க வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும், இதை அவர் ஒரு அறிக்கையாக வெளியிட்டு கோர்ட்டுக்கும் அதை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மணிவண்ணின் மனுவை ஏற்றுக்கொண்டது கோர்ட். வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, இதுதொடர்பாக ரஜினி வளிக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். அதோடு வழக்கையும் ஏப்., 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.