ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழில் மன்மதலீலை, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி, தசாவதாரம் போன்ற படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. ஆரம்ப காலத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஜெயப்பிரதா பின்னர் இந்திக்கும் சென்று பிரபல நடிகையாகி விட்டார். இப்போதும் அவ்வப்போது இந்தி படங்களில் நடித்து வரும் அவர், பல படங்களை தயாரித்தும் வெளியிட்டிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது தனது அக்கா மகன் சித்துவை வைத்து உயிரே உயிரே என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் வெளியான இஷக் படத்தின் ரீமேக் ஆகும்.
இந்தியில் தான் பிரபல நடிகையாக இருந்தபோதும் சித்துவை தமிழில் அறிமுகம் செய்தது பற்றி ஜெயப்பிரதா கூறுகையில், நான் தமிழ்ப்படங்களில் நடித்தபோது எனக்கு தமிழ் மக்கள் நல்ல வரவேற்பை தந்தார்கள். அதனால்தான் எனது மகன் சித்துவையும் தமிழில் அறிமுகம் செய்தால் அவனுக்கு நல்லதொரு தொடக்கமாக அமையும் என்று தோன்றியது. அதனால்தான் உயிரே உயிரே படத்தை இந்தியில் தயாரிக்காமல் தமிழில் தயாரித்திருக்கிறேன் என்கிறார் ஜெயப்பிரதா.