'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்தி, நாகார்ஜுனா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'தோழா' திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சேர்த்து மூன்று நாட்களில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் 'கார்த்தியின் தோழா' என்ற பெயரிலும் தெலுங்கில் 'ஊப்பிரி' என்ற பெயரிலும் இப்படம் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.
தமிழில் மட்டும் முதல் மூன்று நாட்களில் சுமார் 8 கோடி ரூபாயும், தெலுங்கில் 12 கோடி ரூபாயும் மற்ற மாநிலங்களில் 4 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 6 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 'பாகுபலி' படத்திற்குப் பிறகு ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலித்துள்ளது இரு மொழி திரையலகத்தினரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அடுத்து சூர்யா உள்ளிட்ட சில தமிழ் நடிகர்கள் தெலுங்கிலும், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சில தெலுங்கு நடிகர்கள் தமிழிலும் நடிக்க உள்ளனர். இரு மொழி ரசிகர்களும் இப்படிப் படங்களை ரசிக்கும் போது இரண்டு திரையுலகத்திற்கும் அது கொண்டாட்டமாக இருக்கும் என்றே கருதுகிறார்கள். இரு மொழி ரசிகர்களின் ரசனைகளும் வெவ்வேறாக இருந்தாலும் சில கதைகள் மட்டுமே இரு மொழி ரசிகர்களுக்கும் பொதுவானதாக இருக்கும். அதைப் புரிந்து கொண்டு படம் எடுத்தால் மட்டுமே இப்படி டபுள் வெற்றியைப் பெற முடியும்.