ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை: உலகில் அதிக பாடல்கள், அதாவது 17 ஆயிரத்து 965 பாடல்களை பாடியமைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் கான சரஸ்வதியான பி.சுசீலா.
1935ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, ஆந்திராவில் பிறந்தவர் பி.சுசீலா. சிறு வயதிலேயே இசை மீது தீராத காதல் கொண்ட சுசீலா, முறையாக இசைப்பயிற்சி பயின்றார். ஆரம்ப காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் பாடி வந்தார். 1950ம் ஆண்டு இசையமைப்பாளர் பெண்டயாலா நாகேஸ்வர ராவ், புதுமுக பாடகி ஒருவரை தேடி வந்தார். அப்போது ஆல் இந்தியா ரேடியோ சார்பில் சுசீலா உள்ளிட்ட 5 பேர் பரிந்துரைக்கப்பட்டார்கள். அதில் பி.சுசீலா தேர்வானார்.
1952ம் ஆண்டு தமிழில் வெளியான ''பெற்ற தாய்'' என்ற படத்தில் 'எதற்கு அழைத்தாய்...' என்ற பாடலை முதன்முதலாக பாடினார். அப்போது ஆரம்பித்தது சுசீலாவின் பாட்டு பயணம். 60 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட பல மொழிகளில் பாடினார். இதுவரை தனியாகவும் பிறருடன் சேர்ந்தும் 17 ஆயிரத்து 965 பாடல்களை பாடியுள்ளார். சினிமா பாடல் மட்டுமல்லாது ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.
இந்த சாதனைக்காக, இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இதற்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பு, பி.சுசீலாவிடம் வழங்கியுள்ளது.
சுசீலா, இதுவரை தமிழில் இரண்டு முறை மற்றும் தெலுங்கில் 3 முறை என மொத்தம் 5 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். இதுதவிர தமிழக, கேரள, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
கான சரஸ்வதி பி.சுசீலாவின் மணிமகுடத்தில் மற்றுமொரு சாதனை மகுடம் இந்த கின்னஸ் சாதனை.
வாழ்த்துக்கள் பி.சுசீலா மேடம்...!
பி.சுசீலா பாடிய பிரபலமான தமிழ் ஸோலோ பாடல்கள் சில....
* நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா... (படம் : உயர்ந்த மனிதன்)
* சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு..... (படம் : சவாலே சமாளி)
* வசந்தந்தில் ஒரு நாள்...... (படம்: மூன்று தெய்வங்கள்)
* மன்னவன் வந்தானடி.... (படம் : திருவருட்செல்வர்)
* உன்னழகை கன்னியர்கள்.... (படம் : உத்தமபுத்திரன்)
* என்னை மறந்ததேன் தென்றலே... (படம் : கலங்கரை விளக்கம்)
* கங்கை கரைத் தோட்டம்.... (படம் : வானம் பாடி)
* அத்தான் என்னத்தான்... (படம் : பாவமன்னிப்பு)
* கோமாதா எங்கள் குலமாதா... (படம் : சரஸ்வதி சபதம்)
* சொன்னது நீ தானா.... (படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்)
* நெஞ்சம் மறப்பதில்லை... (படம் : நெஞ்சம் மறப்பதில்லை)
* கண்ணா கருமை நிற கண்ணா... (படம்: நானும் ஒரு பெண்)
* ஒரு நாள் யாரோ... (படம் : மேஜர் சந்திரகாந்த்)
* தங்கத்திலே ஒரு குறையிருந்தால்... (படம் : பாகப்பிரிவினை)
* ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்... (படம் : பாலும் பழமும்)
* நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்... (படம் : நூற்றுக்கு நூறு)
* இறைவன் வருவான்.... (படம் : சாந்தி நிலையம்)
* காலைத்தென்றல்... (படம் : உயர்ந்த உள்ளம்)
* தேடினேன் வந்தது... (படம் : ஊட்டி வரை உறவு)
* கண்கள் இரண்டும் என்றும் உன்னை கண்டு... (படம் : மன்னாதி மன்னன்)
* நானே வருவேன்... (படம் : யார் நீ)
* நலந்தானா.... (படம் : தில்லானா மோகனாம்பாள்)
* உன்னை நான் சந்தித்தேன்... (படம் : ஆயிரத்தில் ஒருவன்)
* சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... (படம் : புதிய பறவை)
* லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்... (படம் : அன்பே வா)