பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளம், கன்னடத்தில் நடித்து பிரபலமான பிறகு சித்தார்த் நடித்த நூற்றென்பது படத்தில் தமிழுக்கு வந்தார் நித்யாமேனன். அந்த படத்தில் ப்ரியாஆனந்த் மெயின் நாயகியாக நடிக்க, நித்யா இரண்டாவது நாயகியாகத்தான் நடித்தார். அதேபோல் பல படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்த அவரை, தான் இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் கதையின் நாயகியாக நடிக்க வைத்தார். காஞ்சனா-2வில் நடித்த நித்யாமேனனை, ஓ காதல் கண்மணி படத்தில் நாயகியாக நடிக்க வைத்தார் மணிரத்னம். அதையடுத்து, 24, முடிஞ்சா இவனைபுடி, இருமுகன் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், ஆரம்பகாலத்தில் செகண்ட் ஹீரோயின் கேரக்டர்களில் தயங்காமல் நடித்து வந்த நித்யாமேனன், மணிரத்னம் படத்தில் நடித்த பிறகு முதன்மை நாயகி வேடங்களுக்கே முதலிடம் கொடுத்து வருகிறார். ஒருவேளை இரண்டு ஹீரோயின் படம் என்றால் தனக்கும் சரிசமமான வேடம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து தான் இயக்கும் படத்தில் நடிக்க சமீபத்தில் நித்யாமேனனுக்கு அழைப்பு விடுத்தாராம் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், அதே படத்தில் நாயகியாக நடிக்கும் பரிணிதி சோப்ராவை விட தனக்கு சிறிய வேடம் என்பதால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் நித்யாமேனன். அவரிடமிருந்து இப்படியொரு பதில் வரும் என்று எதிர்பார்க்காத மகேஷ்பாபு, முருகதாஸ் ஆகியோர் பெரும் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். அதையடுத்து இப்போது வேறு சில தெலுங்கு நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம் முருகதாஸ்.