'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
கடந்த 2008ல் மலையாளத்தில் 'ட்வெண்ட்டி-2௦' என்கிற படம் வெளியானது என்றும் அந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கினார் என்றும் ஒற்றை வரியில் சாதரணமாக சொல்லிவிடமுடியாது. காரணம் மலையாள சினிமா வரலாற்றில் மிகமிக முக்கியமான படம் அது.. மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அந்தப்படத்தில் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஏதாவது ஒரு ரோலிலாவது நடித்திருந்தனர். மோகன்லால், மம்முட்டி நடித்த இந்தப்படத்தில் சுரேஷ்கோபியும் மூன்றாவது மூர்த்தியாக நடித்திருந்தார். திலீப், ஜெயராம், அவ்வளவு ஏன் அந்தசமயத்தில் முன்னணி ஹீரோவாக இருந்த பிருத்விராஜும் கூட ஒரே ஒரு பாட்டுக்கு நயன்தாராவுடன் நடனம் ஆடிவிட்டு போனார்..
இந்தப்படத்தைப்பற்றி இவ்வளவு அழுத்தமாக இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது.. நடிகர்சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்டார் கிரிக்கெட், ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்களை வைத்து 'பொன்னியின் செல்வன்' போன்ற நாடகம் இவற்றை நடத்த திட்டமிட்டுள்ளது நாசர் தலைமையிலான நடிகர் சங்கம்.. அதை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரை இணைத்து ஒரு படம் தயாரித்து அதன் லாபத்தை சங்கத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்திருக்கிறாராம் விஷால். ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால் இவர்கள் ஒன்று சேர்ந்து நடிக்கலாம் என பேச்சும் இருக்கிறது.
ஆனால் அதைவிட மலையாளத்தில் அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து வெளியான 'ட்வெண்டி-20' போல இங்கே ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவரையும் இணைத்து ஒரு படம் தயாரித்ததில் அதன் பிசினஸும் வேறு, அதன் மூலம் சங்கத்திற்கும் அளவிடமுடியாத தொகை கிடைக்கும் எனவும் சிலர் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம். ஆனால் இதை நடைமுறையில் செயல்படுத்தமுடியுமா என்பது கேள்விக்குறிதான். காரணம் இங்கே நமது நட்சத்திரங்கள் ஒப்புக்கொள்வார்களா, அப்படியே ஒப்புக்கொண்டால் அவர்கள் அனைவருக்குமான கதையை தயார் செய்து இயக்கும் இயக்குனர் இங்கே யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.