ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஸ்வின், ஷிவதா மற்றும் பலர் நடித்துள்ள 'ஜீரோ' என்ற படம் இரு தினங்களுக்கு முன் வெளியானது. ஆதாம், ஏவாள் ஆகியோரின் வரலாறிலிருந்து ஆரம்பித்து, கடவுள், குழந்தை, உலகின் முதல் பெண் லிலித் என யாருக்கும் எளிதில் புரியாத ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். சமீப காலமாக ரசிகர்களுக்காக படம் எடுக்காமல் தங்களுக்காக மட்டுமே படம் எடுப்பது அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஷிவ் மோஹா-வும் சேர்ந்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது. ஏற்கெனவே படம் பார்த்து குழம்பிப் போயிருந்த நிலையில் படக் குழுவினர் படம் முடிந்ததும் கடைசியாக மேடையேறி சுயபுராணம் பாட ஆரம்பித்தனர். அப்போது இயக்குனரை நோக்கி தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட்டுகளை படத்தில் தரக் குறைவாக காட்டியிருப்பது சரியா எனக் கேட்டனர். அதற்கு சரியான விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் இயக்குனர். ஆனால், தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கிளம்ப வேறு வழியில்லாமல் 'சாரி' என மன்னிப்புக் கேட்டார் இயக்குனர்.
படத்தில் காரல் மார்க்ஸ் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் ஒருவரை, பெண் பித்தராக சித்தரித்து நேரடியான வசனங்கள் மூலம் அவரை தரக் குறைவாக படத்தில் காட்டியுள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதாம், ஏவாள் கதையில் ஏவாளுக்கு முன்பாக சாத்தான் குணம் கொண்ட லிலித் என்ற ஒரு பெண்ணை கடவுள் படைத்தாகவும் அந்தப் பெண் கடவுளை எதிர்ப்பவள் என்றும் படத்தில் கூறியுள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்தும் அளவில் படம் இருந்தால் அது கவனத்தை ஈர்க்கும் என இயக்குனருக்கு யாரோ தவறான ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. நாம் விசாரித்துப் பார்த்ததில் படத்தின் இயக்குனர் ஷிவ் மோஹா ஒரு காங்கிரஸ் பிரபலத்தின் மகன் என்று சொல்கிறார்கள்.