டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சந்தானம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதன்காரணமாக அடிக்கடி பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்து முடித்துள்ள தில்லுக்குத்துட்டு படத்தை தொடங்குவதற்கு முன்பு திருப்பதிக்கு பட யூனிட்டுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் சந்தானம். இப்போது தில்லுக் குத்துட்டு படத்தை முடித்து விட்டு, சர்வர் சுந்தரம் படத்தில் இறங்கிவிட்டார்.
இந்நிலையில், தில்லுக்குத்துட்டு படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் சந்தானம். தில்லுக்குத்துட்டு படத்தை தொடங்கும்போது யூனிட்டோடு சென்று சாமி தரிசனம் செய்த சந்தானம் இந்தமுறை தான் மட்டுமே சென்றிருக்கிறார். அதோடு, திருப்பதி சென்று வந்த புகைபடங்களை இணையதளங்க ளில் வெளியிட்டது போன்று ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்த புகைப்படங்களையும் இணையதளங்களில் சந்தானம்தரப்பு வெளியிட்டிருக்கிறது.